பொள்ளாச்சி ஸ்பெஷல் தேங்காய் பால் ரசம்: சுவையும் ஆரோக்கியமும் ஒரு சேர!
பொள்ளாச்சியின் தனித்துவமான சமையல் பாரம்பரியத்தில் தேங்காய் பால் ரசத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கு. இது வெறும் ரசம் மட்டுமில்ல, ஆரோக்கியம் தரும் அருமருந்தும் கூட.
எப்படி செய்யலாம்னு பாக்கலாம். இந்த தேங்காய் பால் ரசம் டைஜஷனுக்கு மட்டும் இல்லாம வயித்து புண்ணையும் ஆத்தும் அல்சர் இருக்குறவங்க சாப்டா நிறையா பெனிபிட்ஸ் இருக்கு.
இந்த ரசம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
வயிற்றுப் புண்ணயும் ஆத்தும்.
அல்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள உணவாகும்.
மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த எளிய மற்றும் சுவையான பொள்ளாச்சி தேங்காய் பால் ரசத்தை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து மகிழுங்கள்!
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- தேங்காய் பால் - ஒரு கப்
- மிளகு -1 tsp
- சீரகம் - 1tsp
- பூண்டு - 4 பல்
- பச்ச மிளகாய் - 1
- தக்காளி - 2 நல்லா பழுத்தது
- புளி - ஒரு நெல்லிகாய் சைஸ் அளவு
- கறிவேப்பிலை -கொஞ்சமா
- கொத்தமல்லி - கொஞ்சமா
- மஞ்சள் தூள் -1 tsp
- கடுகு - 1 tsp
- பெருங்காய பொடி - 1 tsp
தேவையான சமையல் உபகரணங்கள்
- மிக்ஸி ஜார்: மசாலா அரைப்பதற்கு
- கடாய் அல்லது பாத்திரம்: ரசம் கொதிக்க வைப்பதற்கு
- தாளிப்பு கரண்டி: தாளிப்பதற்கு
- கலவை பாத்திரங்கள்: பொருட்களை கலப்பதற்கு
- கரண்டி: கிளறுவதற்கு
செய்முறை :
- ஒரு மிக்சி ஜார் ல மிளகு, சீரகம்,4 பல் பூண்டு,ஒரு பச்ச மிளகா சேத்து கொர கொறப்பா அரைச்சுக்கோங்க.
- இப்ப அது கூட ரெண்டு பழுத்த தக்காளி ஒரு நெல்லிகாய் சைஸ் புளிய கரச்சு அதேமாதிரி கூட சேத்து, கருவேப்பிலை, கொத்தமல்லி சேத்து நல்லா கையிலேயே பெசஞ்சு விட்டுகோங்க.
- அதுகூட எக்ஸ்ட்றா ஒரு பௌல் தண்ணீ சேத்து மஞ்சள் தூள் போட்டு நல்லா கிளறி விட்டு அடுப்புல வச்சு ஒரு நொர கட்டுற வரைக்கும் விடுங்க.
- நோர கட்டுனதும் அடுப்ப ஆஃப் பண்ணிடு தாளிப்புக்கு கொஞ்சமா கடுகு, கொஞ்சம் பெருங்காய பொடி சேத்து அதுல ஊத்திக்கோங்க.
- கடைசியா நம்ம எடுத்துவச்ச தேங்காய் பால சேத்து உப்பு சேத்து நல்லா கலந்து விட்டிங்கன்னா காம காமனு தேங்காய் பால் ரசம் ரெடி
- எல்லா ரசத்தையும் விட இந்த ரசம் ரொம்ப யூனிக்கா ரொம்ப ஃப்லேவரா இருக்கும்.
- கண்டிப்பா இந்த பொள்ளாச்சி ஸ்டைல் தேங்காய் பால் ரசத்த நீங்களும் உங்களுக்கு வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.
பரிமாறும் முறை:
- இந்த ரசம் சூடாக சாதத்துடன் பரிமாற சிறந்தது.
- ரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கலாம்.
- விருப்பப்பட்டால், அப்பளம் அல்லது வடகத்துடன் பரிமாறலாம்.
குறிப்பு:
- தேங்காய் பால் சேர்த்த பிறகு ரசத்தை கொதிக்க விடக் கூடாது.
- புளிப்பு மற்றும் காரம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
- இந்த ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறப்பானதாக இருக்கும்.
Add a Comment